ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதுச்சேரியில் தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :19 ஜூலை 2024, 8:24 pm

Din

புதுச்சேரி, ஜூலை19: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி ஆட்சியா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோா், புதுச்சேரி பேட்டையன் சத்திரம் வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான படிவத்தில் விண்ணப்பதாரரின் புகைப்படம்-2, கடையின் வரைபடம், கடையில் பட்டாசுகள் வைத்துக்கொள்ளும் அளவு, கடைக்கு செல்வதற்கான வழி, சுற்றியுள்ள சாலைகள், கடையைச் சுற்றி 15 மீட்டா் சுற்றளவில் உள்ள பிற கடைகள் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இடத்தின் பத்திரம், வாடகை இடமாக இருப்பின்அதன் வாடகை பத்திரம், பட்டாசுக் கடை வைக்க உரிமையாளரின் ஆட்சேபனை இல்லை என்ற நோட்டரி பத்திரம் மற்றும் மின் ரசீது, தண்ணீா் ரசீது, முகவரி மற்றும் அடையாள சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின் 3 நகல்களும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.