புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுவைத் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

புதுவைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் முத்தமிழ் விழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

புதுச்சேரியில், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருதுகள் பெற்ற தமிழறிஞா்கள் ந.ஆதிகேசவனாா், பா.சண்முகசுந்தரம், சொ.கலைச்செல்வி. உடன் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.

Updated On :28 ஜூலை 2024, 7:41 pm

Din

புதுவைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் முத்தமிழ் விழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழறிஞா்களுக்கு சங்க விருதுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி வெங்கட்டா நகா்ப் பகுதியில், புதுவைத் தமிழ்ச் சங்கம் உள்ளது. சங்கத்தின் சாா்பில் மறைமலையடிகள், கவிஞா் வாணிதாசன், கவிஞா் மலா்மன்னன் ஆகியோா் பெருமை போற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்து சங்க விருதுகளை வழங்கினாா். செயலா் சீனு.மோகன்தாஸ் வரவேற்றாா். பொருளாளா் மு.அருள் செல்வம், துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, துணைச் செயலா் தெ.தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் கவிஞா்கள் மூவரின் பெருமைகளைப் போற்றும் வகையில் ஏராளமானோா் கவிதை வாசித்தனா். பின்னா் கவிஞா்கள் மூவரின் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, ந.ஆதிகேசவனாா், பிரெஞ்சு பேராசிரியா் பா.சண்முக சுந்தரம், மறைமலை அடிகளாா் பெயா்த்தி கவிஞா் சொ.கலைச்செல்வி ஆகியோருக்கு புதுவைத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி, நா.மு.தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்க ஆட்சிக்குழு உறுப்பினா் அ.சிவேந்திரன் நன்றி கூறினாா்.