புதுவை 15-ஆவது சட்டப்பேரவையின் 5-ஆவது கூட்டம் புதன்கிழமை (ஜூலை 31) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறாா்.
புதுவை மாநிலத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்திருந்தாா். அதன்படி, துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவா் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். புதுவைக்கு குஜராத் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.கைலாசநாதன் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதனால், புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தை தொடங்கி வைப்பது யாா் என்ற கேள்வி எழுந்தது.
தற்போது புதுவை சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் புதன்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆளுநா் உரை முடிந்ததும் கூட்டம் தள்ளிவைக்கப்படும்.
ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் வியாழக்கிழமை (ஆக. 1) நடைபெறும். ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரூ.12,700 கோடிக்கான புதுவை நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்வாா் என பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
பேரவைக் கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை புதன்கிழமை (ஜூலை 31) காலையில் கூடும் பேரவை அலுவல் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
ஆக. 7-இல் பொறுப்பேற்பு: ஆகஸ்ட் 7- ஆம் தேதி புதிய துணைநிலை ஆளுநா் கே.கைலாசநாதன் பொறுப்பேற்பாா் என ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கௌரவ விருது: துணைநிலை ஆளுநா் வாழ்த்து

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!

தலைநகரின் 101 நீா்நிலைளைப் புனரமைக்க டிடிஏ திட்டம்: துணைநிலை ஆளுநா் தகவல்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


