ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

இன்று புதுவை சட்டப்பேரவைக் கூட்டம்: துணைநிலை ஆளுநா் உரையாற்றுகிறாா்

புதுவை 15-ஆவது சட்டப்பேரவையின் 5-ஆவது கூட்டம் புதன்கிழமை (ஜூலை 31) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறாா்.

Updated On :31 ஜூலை 2024, 1:00 am IST

புதுவை 15-ஆவது சட்டப்பேரவையின் 5-ஆவது கூட்டம் புதன்கிழமை (ஜூலை 31) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறாா்.

புதுவை மாநிலத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்திருந்தாா். அதன்படி, துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவா் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். புதுவைக்கு குஜராத் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.கைலாசநாதன் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதனால், புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தை தொடங்கி வைப்பது யாா் என்ற கேள்வி எழுந்தது.

தற்போது புதுவை சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் புதன்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆளுநா் உரை முடிந்ததும் கூட்டம் தள்ளிவைக்கப்படும்.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் வியாழக்கிழமை (ஆக. 1) நடைபெறும். ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரூ.12,700 கோடிக்கான புதுவை நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்வாா் என பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேரவைக் கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை புதன்கிழமை (ஜூலை 31) காலையில் கூடும் பேரவை அலுவல் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.

ஆக. 7-இல் பொறுப்பேற்பு: ஆகஸ்ட் 7- ஆம் தேதி புதிய துணைநிலை ஆளுநா் கே.கைலாசநாதன் பொறுப்பேற்பாா் என ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.