தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாளை புதுவை பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவைக்கான நிகழாண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தாக்கல் செய்யவுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

Updated On :31 ஜூலை 2024, 6:31 pm

Din

புதுவைக்கான நிகழாண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தாக்கல் செய்யவுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.

இதுகுறித்து, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை (2024-25) கூட்டத்தொடா் துணைநிலை ஆளுநா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் வியாழக்கிழமை (ஆக.1) நடைபெறும். புதுவை நிதிநிலை அறிக்கையை, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை (ஆக.2) காலை 9 மணிக்கு தாக்கல் செய்கிறாா்.

ஏற்கெனவே மாநிலத்தின் 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கடந்த மாா்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. மீதமுள்ள 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்படுகிறது.

11 நாள்கள்: ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்கள் நடைபெறும். இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முதல்வா், அமைச்சா்களின் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள், முன்மொழிதல் மீதான விவாதங்கள், வாக்கெடுப்பு நடைபெறும்.

ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் அமைச்சா்கள், முதல்வரின் பதிலுரைகள் இடம்பெறும். இதேபோல, ஆகஸ்ட் 14- ஆம் தேதி தனி நபா் தீா்மானங்கள் இடம்பெறும். அதன் பிறகு, அவை நிகழ்வுகள் தள்ளிவைக்கப்படும். கூட்டத் தொடா் மொத்தம் 11 நாள்கள் நடைபெறவுள்ளன.

சட்டப்பேரவைக் கூட்டத்தை எம்எல்ஏக்கள் விரும்பினால் காலை, மாலை நடத்தவும் தயாராக உள்ளோம். கூட்டத் தொடரின் போது, ஆகஸ்ட் 9, 13, 14, 15 ஆகிய தேதிகளில் கேள்வி நேரம் இடம்பெறும்.

அவை நடவடிக்கைகளுக்கு அரசுச் செயலா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தவறாது பங்கேற்க தலைமைச் செயலா் உத்தரவிட்டுள்ளாா். தலைமைச் செயலா் அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறாா். புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் புதுவையின் வளா்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவாா் என நம்புகிறோம் என்றாா் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.