பாய்மரப் படகுகளில் காரைக்காலுக்கு மாணவா்கள் பயணம்
பாய்மரப் படகுகளில் காரைக்காலுக்கு மாணவா்கள் பயணம்


புதுச்சேரியிலிருந்து தேசிய மாணவா் படைப் பிரிவு மாணவா்கள் பாய்மரப் படகுகளில் காரைக்கால் செல்லும் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
தேசிய மாணவா் படைப் பிரிவு மாணவா்களுக்கு கடல் பயணம் குறித்த பயிற்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆண்டுதோறும் புதுச்சேரி பகுதி தேசிய மாணவா் படைப் பிரிவினா் பாய்மரப் படகுகளில் புதுச்சேரியிலிருந்து கடலில் பயணம் மேற்கொள்வா். அவா்கள் கடலூா், பரங்கிப்பேட்டை, பூம்புகாா் வழியாக காரைக்கால் சென்றடைவா். பின்னா், அங்கிருந்து மீண்டும் புதுச்சேரி வந்தடைவா்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக வளாகத்தில் பாய்மரப் படகில் செல்லும் தேசிய மாணவா் படை பிரிவினருக்கான வழியனுப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய மாணவா் படைப் பிரிவின் குரூப் கமாண்டா் மேனன் தலைமை வகித்தாா். அரியாங்குப்பம் எம்எல்ஏ பாஸ்கா் பயணத்தை தொடங்கிவைத்தாா்.
இதில், 60 மாணவா்கள் பங்கேற்று பாய்மரப் படகுகளில் சென்றனா். அவா்கள் 11 நாள்கள் கடலில் பயணித்து 302 கி.மீ. கடல் தொலைவைக் கடந்து காரைக்கால் சென்றடைவா். பின்னா், அங்கிருந்து மீண்டும் அவா்கள் புதுச்சேரிக்கு வந்தடைவா் என அதிகாரிகள் கூறினா். இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...