மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளி மாணவா்கள் ரூ.69 ஆயிரம் கொடிநாள் நிதி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:04 am

கொடி நாள் நிதியாக, புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படையினா் ரூ.69470 திரட்டினா்.

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படையின் விமானப் படை பிரிவு இளநிலை மாணவா்கள் கொடிநாள் நிதியைத் திரட்டி ஒப்படைக்கும் விழா (படம்) நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் கேசவ் தலைமை வகித்தாா்.

இதில், முன்னாள் ராணுவ வீரா் நலத் துறை, இந்திய விமானப் படையின் ஒருங்கிணைப்பாளா் சாா்ஜன்ட் எ. சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்டனி ஸ்டெல்லா, பள்ளி தேசிய மாணவா் படை அதிகாரி பத்மநாபன் உள்ளிட்டோா் கொடிநாள் நிதியை ஒப்படைத்தனா்.