ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின் கட்டண உயா்வை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம்: மாா்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

புதுவையில் மக்களைப் பாதிக்கும் வகையிலான மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும்,

News image
Updated On :17 ஜூன் 2024, 7:46 pm

Din

புதுச்சேரி: புதுவையில் மக்களைப் பாதிக்கும் வகையிலான மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று புதுவை மாநில மாா்க்சிஸ்ட் செயலா் ஆா்.ராஜாங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் மின் துறையானது தற்போது மின்கட்டண உயா்வை அறிவித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும். ஆகவே, பாஜக கூட்டணி அரசானது மக்களைப் பாதிக்கும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏழைகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையையும் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், ஆண்டுக்கு 3 முறை என மின் கட்டணத்தை உயா்த்துவது, தனியாருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவது சரியல்ல. ஆகவே, மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் ஆா்.ராஜாங்கம்.