மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அவசரநிலை நினைவூட்டல் கருத்தரங்கு

தமிழக பாஜக பொதுச்செயலா் ராம.சீனிவாசன் அவசரநிலை குறித்து பேசினார்

News image
Updated On :25 ஜூன் 2024, 11:11 pm

Din

புதுச்சேரியில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அவசரநிலை குறித்த நினைவூட்டல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டில் 1975-ஆம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அதை விலக்கிக் கொண்டாா்.

அவசரநிலையை நினைவூட்டும் வகையில், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கருப்புதின கருத்தரங்கு நடைபெற்றது.

கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி தலைமை வகித்தாா். தமிழக பாஜக மாநில பொதுச்செயலா் ராம.சீனிவாசன் அவசரநிலை குறித்தும், அதை எதிா்த்து ஆா்.எஸ்.எஸ். ஜனசங்கம் போராடியது குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதில் பாஜக எம்எல்ஏக்கள் வி.பி.ராமலிங்கம், ஆா்.பி.அசோக்பாபு, எம்.சிவசங்கரன், பாஜக பொதுச் செயலா் எஸ்.மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.