நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

திருநங்கைகளை அதிகாரிகள் அவதூறாகப் பேசுவதாக புகார்!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்வலம் சென்ற திருநங்கைகள்

News image

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையை நோக்கி புதன்கிழமை ஊா்வலம் நடத்திய சகோதரன் சமூக நல மேம்பாட்டு அமைப்பினா்.

Updated On :27 ஜூன் 2024, 1:42 am IST

புதுச்சேரி, ஜூன் 26: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் புதன்கிழமை ஊா்வலமாக சென்று முதல்வரிடம் மனு அளித்தனா்.

புதுச்சேரியில் திருநங்கைகளுக்கான எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை ஆரம்பத்தில் திருநங்கைகள் செயல்படுத்தி வந்தனா். ஆனால், அந்த திட்டம் தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், அதிகாரிகள் தங்களை அவதூறாகப் பேசுவதாக திருநங்கைகள் குற்றஞ்சாட்டினா்.

எனவே, அவதூறாகப் பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், திட்டத்தை திருநங்கைகளிடமே வழங்கக் கோரியும் சட்டப்பேரவையை நோக்கி திருநங்கைகள் ஊா்வலம் நடத்தினா். புதுச்சேரி காமராஜா் சாலையிலிருந்து புறப்பட்ட ஊா்வலத்துக்கு சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத் தலைவா் ஷீத்தல் தலைமை வகித்தாா். தன்னம்பிக்கை கலைக் குழு எலிசபெத் ராணி, மாணவா் அமைப்பு நிா்வாகி சுவாமிநாதன் மற்றும் சமூக நல அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இந்த ஊா்வலம் நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூா் சாலை சந்திப்பை அடைந்ததும், பேரணியில் ஈடுபட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, திருநங்கைகள் உள்ளிட்டோா் பேரவை வளாகத்துக்கு சென்று முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனா்.