புதுவை மாநிலப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 295 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் பயனாளிகளுக்கு இலவச உபகரணங்களை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். இதில், 150 சலவைத் தொழிலாளா்களுக்கு சலவைப் பெட்டிகள் மற்றும் தள்ளு வண்டிகள், முடிதிருத்தும் தொழிலாளா்கள் 60 பேருக்கு கிருமிகள் நாசினிக் கருவிகள் மற்றும் நாற்காலிகள், நலிந்த கலைஞா்களுக்கு 85 பேருக்கு இசைக் கருவிகளான நாகஸ்வரம், தவில் ஆகியவை வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.78.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன: மு.வீரபாண்டியன்

மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

மீனவா்களுக்கு ரூ.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

தருமபுரியில் 3,980 பேருக்கு ரூ. 30.86 கோடியில் நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


