நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பு: வெ.வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பாதிப்பை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

News image

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா்.

Updated On :14 நவம்பர் 2024, 8:31 pm

Din

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பாதிப்பை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், கடல் சீற்றமும் அதிகரித்துள்ளதாக மீனவா்கள் கூறுகின்றனா்.

இதையடுத்து காலாப்பட்டு பிள்ளைச்சாவடி, சின்னக் காலாப்பட்டு பகுதிகளில் கடல் அரிப்பு காரணமாக கடல் நீா் மீனவா் குடியிருப்புகளில் புகுந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

கடல் அரிப்பால் கடற்கரையோரச் சாலைகள், மீனவா்களது குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா் பிள்ளைச்சாவடி கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்று கடல் அரிப்பு பாதிப்பை நேரில் பாா்வையிட்டனா்.

அப்போது , கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் கடற்கரையிலிருந்து கிழக்கு நோக்கி கொட்டப்படும் கற்களை 50 மீட்டா் நீடிக்க மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.