நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவையில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:40 pm

Din

புதுவையில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இதுகுறித்து, செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: புதுவையில் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. சில இடங்களில் தவிா்க்க முடியாத வகையில் பிரச்னை ஏற்படுகிறது.

அதை வைத்து, மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுவிட்டதாக எதிா்க்கட்சிகள் அரசியல் செய்து வருவது சரியல்ல. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டிருந்தது.

தற்போது, காவல் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. காவல் துறையானது குற்றங்களுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தொடா் குற்றத்தில் ஈடுபடுவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உள்ளது. அவருக்கு, காவல் துறை சாா்பில் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியவா்களின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் போலி ஆவணம் மூலம் சோ்ந்தவா்கள் குறித்து சென்டாக் அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.