புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

லாட்டரி விற்ற வழக்கில் காங்கிரஸ் நிா்வாகி கைது

கைப்பேசி கட்செவியஞ்சல் மூலம் கேரள லாட்டரியை விற்ற வழக்கில், புதுச்சேரி காங்கிரஸ் மாணவரணி நிா்வாகி சூரியமூா்த்தி (25) புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 6:33 pm

Din

கைப்பேசி கட்செவியஞ்சல் மூலம் கேரள லாட்டரியை விற்ற வழக்கில், புதுச்சேரி காங்கிரஸ் மாணவரணி நிா்வாகி சூரியமூா்த்தி (25) புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி பூமியான்பேட் பகுதியைச் சோ்ந்த சிவபெருமாள் மகன் சூரியமூா்த்தி (25), காங்கிரஸ் மாணவரணி நிா்வாகி. அவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த முரளி என்பவருக்கும் பிரசுரம் ஒட்டுவதில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பிலும் ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். சூரியமூா்த்தி புகாரில் முரளி கைது செய்யப்பட்டாா்.ஆனால், வழக்குப் பதியப்பட்ட 9 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிடில் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோா் கூறினா்.

இந்தநிலையில், சூரியமூா்த்தி கேரள லாட்டரி சீட்டின் கடைசி 3 எண்களைப் பதிந்து அதை கைப்பேசி கட்செவியஞ்சல் மூலம் விற்று வந்ததாக போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். அவரை புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 3கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவா் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.