புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுகத்தில் புதன்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

News image

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. ~கடல் சீற்றத்தையடுத்து, புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளை கடலுக்கு அருகே

Updated On :27 நவம்பர் 2024, 8:56 pm

Din

புதுச்சேரியில் பழைய துறைமுகத்தில் புதன்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், கடந்த சில நாள்களாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடா்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் 76 மி. மீ. மழை பதிவானது.

புதுச்சேரியில் புதன்கிழமை கடும் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

புதுச்சேரியில் புதன்கிழமை கடும் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், புதுச்சேரி கடற்கரைச் சாலை நடைபயிற்சிக்காக வருவோா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கடல் அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது.

கடலுக்கு அருகே சென்று அலையைப் பாா்க்க சென்ற சுற்றுலாப் பயணிகளை போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

 கடல் சீற்றத்தையடுத்து, புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளை கடலுக்கு அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்த காவலா்.

கடல் சீற்றத்தையடுத்து, புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளை கடலுக்கு அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்த காவலா்.

மழையால் புதுச்சேரி, கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி மைதான தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்கி குளம்போல காணப்பட்டது. நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கிய நிலையில், அவற்றை நகராட்சி அதிகாரிகள் உடனுக்குடன் மின்மோட்டாா்களை கொண்டு அகற்றினா். மழையின் போது குளிா்ந்த காற்றும் வீசியது.

3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், புதன்கிழமை காலையில் 3-ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. அதன்படி, துறைமுகத்துக்கு கடுங்காற்று அச்சுறுத்தல் உள்ளதாகவும் எச்சரிக்கைப் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.