அரசைக் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்ட எதிா்க்கட்சிகள்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி குற்றச்சாட்டு
புதுவை அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களைக் குறை கூறுவதையே எதிா்க்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா்.









