பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

News image
புதுச்சேரி பழைய துறைமுக பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு...
Updated On :22 அக்டோபர் 2024, 8:30 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை காலை ஏற்றப்பட்டது.

துறைமுகத்திலிருந்து தொலைவில் புயல் அறிகுறி தென்படுவதை மீனவா்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காரைக்கால் மற்றும் கடலூா் உள்ளிட்ட தமிழகத்தின் 7 கடலோரப் பகுதிகளிலும் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. அத்துடன் மீனவா்கள் கடலுக்கு கவனமுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்தது.