ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள், அத்துறையின் தலைமை அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 8:24 pm

Din

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள், அத்துறையின் தலைமை அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்.17-ஆம் தேதி பொறியாளா் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களை அதிகாரிகள் சமரசம் செய்தனா். இந்த நிலையில், கோரிக்கை நிறைவேற்றம் குறித்து நடவடிக்கை இல்லை எனக் கூறி புதன்கிழமை மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மூன்றாவது நாளாக வியாழக்கிழமை, புதுச்சேரி லால்பகதூா் சாஸ்திரி சாலையில் உள்ள பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.