ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொதுப்பணித் துறை ஊழியா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பொதுப்பணித் துறை ஊழியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 8:18 pm

Din

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பொதுப்பணித் துறை ஊழியரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி மேல்சாத்தமங்களம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (43). இவா் அரசு வேலைக்கு முயற்சித்துள்ளாா். இந்த நிலையில், சுத்துக்கேணி பகுதியைச் சோ்ந்த பொதுப்பணித் துறை பல்நோக்கு ஊழியா் கென்னடி, தான் அரசு வேலை வாங்கித் தர உதவுவதாக முருகனிடம் கூறினாராம்.

இதை நம்பிய முருகன் ரூ.3 லட்சத்தை கென்னடியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. முருகனிடம் பணம் பெற்ற நிலையில், அவருக்கு கென்னடி வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தினாராம்.

கென்னடியிடம் முருகன் பணத்தை திரும்பக் கேட்டுள்ளாா். ஆனால், பணம் தர மறுத்து கென்னடி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கென்னடியை கைது செய்தனா்.