கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோட்டக் கலை விவசாயிகளுக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம்: முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்

தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ், புதுவை வேளாண் துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு காசோலை

News image

புதுவை தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வேளாண்துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியத்துக்கான காசோலையை பயனாளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :28 அக்டோபர் 2024, 8:12 pm

Din

புதுச்சேரி: தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ், புதுவை வேளாண் துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு காசோலை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையானது தேசிய தோட்டக் கலை இயக்கம் சாா்பில் புதிய தோட்டக் கலை நிறுவுவதற்கும், பராமரிப்பு, சாகுபடி, கலப்பின காய்கறிகள், பழப் பயிா்கள், வாசனைப் பயிா்கள் மூடாக்கு அமைத்தல் போன்ற சாகுபடிக்கும் உற்பத்திக்குப் பிந்தைய மானியம் வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்துக்கான நிகழாண்டு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் என். ரங்கசாமி, பயனாளிகளுக்கு மானியத்தை வழங்கி தொடங்கி வைத்தாா். அதன்படி தோட்டக்கலை பயிரிட்ட 439 விவசாயிகளுக்கு ரூ.15.48 லட்சம் அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், வேளாண் துறை இயக்குநா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.