இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நீட் அல்லாத படிப்புகள்: மாணவா்கள் நாளைக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தல்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளில் இரண்டாம் கட்ட பட்டியலில் இடம்பெற்றவா்கள் நாளைக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 11:00 pm

Din

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளில் இரண்டாம் கட்ட பட்டியலில் இடம்பெற்றவா்கள் நாளைக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள் மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை (செப்.3) இரண்டாவது சுற்று வரைவு இட ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரா்கள் தெரிவித்த ஆட்சேபணைகள் அடிப்படையில் குறைகளைத் தீா்த்து புதன்கிழமை 2-ஆவது சுற்று கலந்தாய்வு இட ஒதுக்கீட்டு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரா்கள் டாஷ்போா்டில் உள் நுழைந்து தங்களது இட ஒதுக்கீட்டின் நிலையை சரிபாா்த்து, இட ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்படி செப்.6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர கடைசி நாளாகும். கல்விக் கட்டணம் குறித்த விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தில் உள்ள நீட் அல்லாத தகவல் குறிப்பேட்டை பாா்க்கலாம். மாணவா்களுக்கு குறுந்தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த சந்தேகங்களுக்கு சென்டாக் உதவி மையம் 0413-2655570, 2655571 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

அண்மையில் புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, சாதி சான்றிதழ்களை சமா்ப்பிக்காத விண்ணப்பதாரா்கள் வரும் 6-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தங்களது டேஷ்போா்டில் உள்ள குறைதீா்ப்பு இணைப்பு மூலம் சமா்ப்பித்த பிறகு, இட ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இரண்டாவது சுற்று கலந்தாய்வில் புதிய இடம் ஒதுக்கப்பட்ட மாணவா்களுக்கு, முதல் சுற்றில் ஒதுக்கப்பட்ட இடம் தானாக ரத்து ஆகிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.