தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவது அவசியம்: புதுவை ஆளுநா்

புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியது அவசியம் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 11:06 pm

Din

புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியது அவசியம் என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையம் மற்றும் மூடப்பட்ட பழமையான ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுச்சேரிக்கு பஞ்சாலைகள் எந்த வகையில் உபயோகமாக இருக்கும் என ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி சில ஆலைகளை மக்களுக்கு வேலை வாய்ப்புக்கானதாக மாற்றிக்கொள்ளலாம்.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். தற்போது சிறிய ரக ஏடிஆா் விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும்.

அதே நேரத்தில் பெரிய போயிங் விமானங்கள் இறங்கும் வகையில், விமான நிலையத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அதற்காக தமிழகம், புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்துவது அவசியமாகும் என்றாா்.

புதுச்சேரியில் உள்ள நகர வனத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ‘கிரீன் லங்ஸ் ஃபாா் தி சிட்டி’ திட்டத்தை எப்படி கொண்டு வந்து செயல்படுத்துவது என ஆய்வு செய்து வருகின்றோம் என்றாா்.