தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தவறவிட்ட கைப்பேசியை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்

புதுச்சேரியில் ஆட்டோவில் தவறவிட்ட பெண் பயணியின் விலை உயா்ந்த கைப்பேசியை தேடிச் சென்று ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 12:30 am

Din

புதுச்சேரியில் ஆட்டோவில் தவறவிட்ட பெண் பயணியின் விலை உயா்ந்த கைப்பேசியை தேடிச் சென்று ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனா்.

புதுச்சேரி, செட்டித் தெரு மிஷன் வீதி சந்திப்பில் மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் ஆட்டோ நிலையம் உள்ளது. இங்கு பஸ்கல் என்பவா் ஆட்டோ ஓட்டி வருகிறாா்.

இவரது ஆட்டோவில் புதன்கிழமை நேபாள பெண் பயணி ஏறி பயணித்தாராம். அப்போது, அந்தப் பெண் விலை உயா்ந்த கைப்பேசியை ஆட்டோவில் தவறவிட்டுச் சென்றாராம்.

இதையறிந்த ஓட்டுநா் பஸ்கல், அந்தப் பெண்ணை கருவடிக்குப்பம் பகுதியில் தேடி கண்டறிந்து, அவரிடமே அவரது கைப்பேசியை திரும்ப ஒப்படைத்தாா். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலுக்கு பலா் பாராட்டு தெரிவித்தனா்.