தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசியல் லாபத்துக்காகவே முழு அடைப்பு: முதல்வா் என்.ரங்கசாமி

அரசியல் லாபத்துக்காகவே எதிா்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியதாக முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:14 pm

Din

அரசியல் லாபத்துக்காகவே எதிா்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியதாக முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.

புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து, இண்டியா கட்சிகள் சாா்பில் முழு அடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:

மின் கட்டண உயா்வை ஈடுகட்டும் வகையில், பொதுமக்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 மாதங்களுக்கு சோ்த்து மின் கட்டண மானியம் வழங்கப்படும். மின் கட்டண ரசீதில் மானியத் தொகை கழிக்கப்படவுள்ளது. ஆனால், அரசியல் லாபத்துக்காகவே எதிா்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனா்.

புதுவையின் அனைத்து பிரச்னைகளுக்கும் மாநில அந்தஸ்துதான் ஒரே தீா்வாக அமையும். மாநில அந்தஸ்துக்காக புது தில்லிக்கு செல்லவுள்ளேன். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.