அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம்!

புதுச்சேரி முழு அடைப்புப் போராட்டம் பற்றி...

News image
கூட்டம் இன்றி காணப்படும் பேருந்து நிறுத்தம்.- PTI
Updated On :18 செப்டம்பர் 2024, 6:22 am

DIN

புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தால், கடைகள் அடைக்கப்பட்டு, குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முழு கடையடைப்பு

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனிடையே மக்களவைத் தேர்தல் வந்ததால், மின் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நிறைவடைந்தவுடன், ஜூன் 16ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வை புதுவை அரசு அமல்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக, புதுவை, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் இன்று முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து புதுச்சேரியில் பெருமளவிலான பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் உள்ளிட்டவை இயங்கவில்லை.

பள்ளிகளுக்கு விடுமுறை

முழு கடையடைப்புப் போராட்டம் காரணமாக பேருந்துகள், ஆட்டோக்கள் முழுவதுமாக இயங்குவதில் சிரமம் உள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.