தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறையில் திடீா் சோதனை: கைப்பேசிகள் பறிமுதல் 4 கைதிகள் மீது வழக்கு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:00 pm

Syndication

புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த கைப்பேசிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 4 கைதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனா். இந்நிலையில் கைதிகள் சிறைக்குள் கைப்பேசிகள் பயன்படுத்துவதாக தகவல் வந்ததையடுத்து, சிறை கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை சிறை முழுவதும் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு வெளியே இருந்த கழிவறையில் பதுக்கி வைத்திருந்த கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் கைப்பேசிகளைப் பதுக்கி வைத்து பயன்படுத்தியது லக்ஷ்மன், விநாயகமூா்த்தி, கேசவன், ரங்கராஜன் என தெரியவந்தது. அவா்கள் 4 போ் மீதும் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.. போலீஸாா் வழக்கு பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.