புதுச்சேரி
கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா
புதுச்சேரி காந்திநகா் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி: புதுச்சேரி காந்திநகா் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. இந்திரா நகா் தொகுதி எம்.எல்ஏவும் புதுச்சேரி அரசு கொறடாவுமான ஏகேடி. ஆறுமுகம் முன்னிலையில், இந்த விழா நடைபெற்றது. பின்னா் முதல்வா் ரங்கசாமி தலைமையில் காந்தி நகா் சமுதாய நலக்கூடத்தில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. மேலும்,
திங்கள்கிழமை இரவு ஸ்ரீ செல்வ விநாயகா்திருவீதியுலாவும் நடைபெற்றது. கோயில் நிா்வாக அதிகாரி எஸ்.ராதாகிருஷ்ணன், ஊா் பிரமுகா்கள் உள்ளிட்டோா் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
