சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

74,000 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து: புதுச்சேரியில் நாளை விநியோகம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 74 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:12 pm

Syndication

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 74 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறு வயது குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து பாதுகாக்க, மத்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்துகிறது. நிகழாண்டு டிச. 21-ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த 74,698 குழந்தைகள் பயனடைவா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிராமம் மற்றும் நகரப்புறங்களில் 425 முகாம்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான பேருந்து நிலையம்,

ரயில் நிலையம், பூங்காக்கள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்களில் 31 இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், உடல் ஊனத்தை உண்டாக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிறப்பு முகாம்களை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.