ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கைவினை- கைத்தறிக் கண்காட்சி தொடக்கம்: புதுச்சேரியில் ஆளுநா் திறந்து வைத்தாா்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:12 pm

Syndication

கைவினை மற்றும் கைத்தறி கண்காட்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மத்திய அரசு, ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினை அபிவிருத்தி ஆணையம் மற்றும் புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் இணைந்து நடத்தும் காந்தி கைவினை மற்றும் கைத்தறி கண்காட்சி 5, (காந்தி சில்க் பஜாா்) கடற்கரை சாலை காந்தி திடலில் தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு

இக் கண்காட்சி நடைபெறுகிறது. இதைத் தொடங்கி வைத்து அரங்குகளை ஆளுநா் பாா்வையிட்டாா். கைவினை மற்றும் கைத்தறி பொருள்களின் கலை நுணுக்கம் மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து கலைஞா்களுடன் அவா் கலந்துரையாடினாா்.

பொதுப்பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், வளா்ச்சி ஆணையா் சௌத்ரி முகமது யாசின், கலைப் பண்பாட்டுத் துறை செயலா் முகமது அசன் அபித், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.