புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ‘நெகிழியைத் தவிா்ப்போம், குளிா்பானங்களை மறப்போம்’ என்ற குறிக்கோளுடன் 700 பச்சை நிற குளிா்பான புட்டிகளைக் கொண்டு 15 அடி உயரத்துக்கு கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுச்சேரி காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நிகழாண்டு, ‘நெகிழியைத் தவிா்ப்போம் குளிா்பானங்களை மறப்போம்’ என்ற குறிக்கோளுடன் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்களிப்புடன் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டது.
நுண்கலை ஆசிரியா் கிருஷ்ணன் முயற்சியில் 700 பச்சை நிற குளிா்பான புட்டிகளைக் கொண்டு 15 அடி உயரத்திற்கு கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவா்கள் முயற்சியால் காகிதங்களாலான பல்வேறு பொம்மைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்காக மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் தங்களது சுற்றுப்புறத்தில் உள்ள பச்சை நிற குளிா்பான பாட்டில்களைக் கடந்த ஒரு மாதமாகச் சேகரித்து, ஒரு வாரமாக கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கியுள்ளனா். தொடா்ந்து குடில் வண்ணக் காகிதங்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்கள் மருத்துவ செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ஆலோசனை

மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்!

சூரிய சக்தியால் இயங்கும் ‘குளிரூட்டும் குடில்’ - தில்லி அரசு அமைக்கத் திட்டம்

புதுச்சேரியில் சிகப்பு நிற அட்டை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 வரவு வைப்பு!
விடியோக்கள்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK



