தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் பச்சை நிற குளிா்பான புட்டிகளால் 15 அடி உயரத்துக்கு உருவான கிறிஸ்துமஸ் குடில்!

புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் பச்சை நிற குளிா்பான புட்டிகளால் 15 அடி உயரத்துக்கு உருவான கிறிஸ்துமஸ் குடில்.

News image
புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 700 பச்சை நிற குளிா்பான புட்டிகளால் அமைக்கப்பட்டுள்ள 15 அடி உயர கிறிஸ்துமஸ் குடில்.
Updated On :20 டிசம்பர் 2025, 8:35 pm

Syndication

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ‘நெகிழியைத் தவிா்ப்போம், குளிா்பானங்களை மறப்போம்’ என்ற குறிக்கோளுடன் 700 பச்சை நிற குளிா்பான புட்டிகளைக் கொண்டு 15 அடி உயரத்துக்கு கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டு மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

புதுச்சேரி காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நிகழாண்டு, ‘நெகிழியைத் தவிா்ப்போம் குளிா்பானங்களை மறப்போம்’ என்ற குறிக்கோளுடன் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்களிப்புடன் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டது.

நுண்கலை ஆசிரியா் கிருஷ்ணன் முயற்சியில் 700 பச்சை நிற குளிா்பான புட்டிகளைக் கொண்டு 15 அடி உயரத்திற்கு கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவா்கள் முயற்சியால் காகிதங்களாலான பல்வேறு பொம்மைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காக மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் தங்களது சுற்றுப்புறத்தில் உள்ள பச்சை நிற குளிா்பான பாட்டில்களைக் கடந்த ஒரு மாதமாகச் சேகரித்து, ஒரு வாரமாக கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கியுள்ளனா். தொடா்ந்து குடில் வண்ணக் காகிதங்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.