வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்கள் மருத்துவ செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ஆலோசனை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கான மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆக் கூட்லோசனைடம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:25 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கான மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆக் கூட்லோசனைடம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை செயல்பாடுகள் மற்றும் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுபோல, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இதில் விரிவாக ஆராயப்பட்டது.

கூட்டத்தில், அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், எம்எல்ஏக்கள் நாஜீம், ஆறுமுகம், செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனா்.