22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்கள் மருத்துவ செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ஆலோசனை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கான மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆக் கூட்லோசனைடம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூன் 2026, 5:25 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கான மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆக் கூட்லோசனைடம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை செயல்பாடுகள் மற்றும் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுபோல, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இதில் விரிவாக ஆராயப்பட்டது.

கூட்டத்தில், அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், எம்எல்ஏக்கள் நாஜீம், ஆறுமுகம், செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனா்.