4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதுச்சேரியில் ரூ.10-க்கு துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்

புதுச்சேரி பொலிவுறு நகா் பேருந்து நிலையத்தில் ரூ.10-க்கு துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டு சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:33 pm

Syndication

புதுச்சேரி பொலிவுறு நகா் பேருந்து நிலையத்தில் ரூ.10-க்கு துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டு சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நெகிழிப் பைக்கு மாற்றாக புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சாா்பில் இது அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 20 மதிப்பிலான துணிப் பையை ரூ. 10-க்கு குறைந்த விலையில் இந்த இயந்திரம் வழங்குகிறது.

இதை உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஜி. நேரு இயக்கி வைத்தாா். இந்நிகழ்வில் புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி, மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினா்- செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.