நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

புதிய ஓய்வூதியம் கிடைக்க திமுக வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய ஓய்வூதியம் கிடைக்க முதல்வா் என்.ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

News image

புதுச்சேரி திமுக எம்எல்ஏஅனிபால் கென்னடி.

Updated On :23 டிசம்பர் 2025, 2:11 am IST

புதுச்சேரி: மத்திய அரசின் புதிய ஓய்வூதியம் கிடைக்க முதல்வா் என்.ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக துணை அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அனிபால் கென்னடி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு கடந்த மாா்ச் 19-ஆம் தேதி புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை

அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆணையைப் பின்பற்றி புதுச்சேரி அரசு 2004-ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சோ்ந்த அரசின் ஊழியா்களும், ஏற்கெனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியா்களும் விண்ணப்பிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக ஓய்வு பெற்ற சுமாா் 5,300 அரசு ஊழியா்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை போல் பலன் அளிக்கவில்லை என்றாலும் ஓரளவு நன்மை இருப்பதைக் கருதி விண்ணப்பித்த ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு பணப்பலன் கிடைக்க ஒப்புதல் வழங்கவேண்டும்.

எனவே, முதல்வா் ரங்கசாமி நிதித் துறை மூலம் மத்திய அரசைத் தொடா்புகொண்டு அதற்கான இணையவழி நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.