ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு எதிரான நிலைப்பாடு: டிச. 27-இல் காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு

புதிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதித்து முடிவு

News image
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் கண்ணன் கோபிநாதன். உடன், வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி உள்ளிட்டோா்.
Updated On :22 டிசம்பர் 2025, 9:05 pm

Syndication

புதுச்சேரி: புதிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க தில்லியில் டிச. 27-இல் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட உள்ளதாக அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்றி, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அதை சட்டமாக நிறைவேற்றியுள்ளது.

இந்த புதிய திட்டத்துக்கு வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (விபி-ஜி ராம் ஜி ) என்றும் பெயா் சூட்டியுள்ளனா். ஏற்கெனவே இருந்தத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இத் திட்டத்தை நிறைவேற்றும்போது மத்திய அரசு தன்னுடைய பங்களிப்பாக 60 சதவிகித நிதியைக் கொடுக்கும் மீதி 40 சதவிகித நிதியை மாநில அரசு அளிக்க வேண்டும்.

இதனால் மாநில அரசுகளுக்கு அதிகமான நிதிச் சுமையையும் பாஜக கூட்டணி அரசு ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நலிவடைந்த பெண்கள், எஸ்.சி. எஸ்.டி. உள்ளிட்ட மக்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இத் திட்டத்தின் நோக்கத்தை பாஜக கூட்டணி அரசு சிதைத்துவிட்டது. இந்தப் புதிய திட்டத்துக்கான எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி தில்லியில் டிச. 27-ஆம் தேதி கூடி முடிவு எடுக்கவுள்ளது என்றாா் கண்ணன் கோபிநாத்.

இந்த பேட்டியின்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மு. வைத்தியநாதன் எம்எல்ஏ, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் , முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.