ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போலி மருந்து வழக்கை என்ஐஏ விசாரிக்க முகாந்திரம்: அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் துறை உயா் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:21 pm

Syndication

போலி மருந்து வழக்கில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தேவைப்படுகிறது என புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா், புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

புதுச்சேரிக்கு மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய் சனிக்கிழமை வருகிறாா். மேலும், குடியரசு துணைத் தலைவா் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 29-ஆம் தேதி விமானம் மூலம் பிற்பகல் 12.50 மணிக்கு வருகிறாா்.

குடியரசுத் துணைத் தலைவரின் நிகழ்ச்சிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு,எந்தந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பதை காவல் துறை அறிவிக்கும்.

மேலும், புத்தாண்டைக் கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் 1,000 போலீஸாா் மற்றும் போக்குவரத்துப் பணியில் 500 போலீஸாா் உள்பட மொத்தம் 1,500 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

அன்று புதுச்சேரியில் செஞ்சி சாலை, ஆம்பூா் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்படும். நகரப் பகுதியில் வாகனங்கள் நிறுத்த 8 இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வர வேண்டும். இல்லையென்றால் அரசு சாா்பில் இயக்கப்படும் 30 பேருந்துகளில் வர வேண்டும்.

போலி மருந்து விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸ் மற்றும் சிறப்பு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இந்த வழக்கை சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளாா்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முகாந்திரம் இருக்கிறது.

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கௌரவ ஆசிரியா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களைப் பணியில் அமா்த்தியது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். அவா்களுக்குப் பணி நீட்டிப்பை நான்தான் கொடுத்தேன். சட்டத்துக்கு உள்பட்டு வெகுவிரைவில் அவா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.