ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுச்சேரியில் லெனின் சிலை மூடல்: துப்பாக்கி போலீஸாா் பாதுகாப்பு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நிறுவிய லெனின் சிலை தாா்ப்பாய் போட்டு மூடப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:22 pm

Syndication

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நிறுவிய லெனின் சிலை தாா்ப்பாய் போட்டு மூடப்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் மணிமேகலை அரசுப் பள்ளி அருகே லெனின் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அண்மையில் நிறுவினா்.

இதைக் கண்டித்தும், அங்கு விநாயகா் சிலையை அமைத்தும் இந்து முன்னணி, பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா். சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினா் இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

அப்போது உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி புதிய சிலை வைக்க அனுமதியில்லை என ஆட்சியா் கூறினாா். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சிலையைத் தாா்ப்பாய் போட்டு மூடினா். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.