தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை!

புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டது பற்றி...

News image

கோப்புப்படம்.

Updated On :14 பிப்ரவரி 2025, 5:51 am

DIN

புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் இரண்டு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் உழவர்கரை சேர்ந்த பிரபல ரெளடி தெஸ்தான் என்பவரின் மகன் ரிஷி, திடீர் நகரைச் சேர்ந்த தேவா மற்றும் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த ஆதி ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக ரெளடிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.