இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

புதுச்சேரியிலும் தமிழகப் பாடத் திட்டத்தையொட்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது.

News image
கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியிலும் தமிழகப் பாடத் திட்டத்தையொட்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்குகிறது.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் இருக்கிறது. இத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது இந்தத் தோ்வுகள் நடைபெறுகின்றன. தோ்வு கால அட்டவணையின்படி வரும் 6.4.26 வரை இத் தோ்வுகள் நடக்கின்றன.

புதுச்சேரியில் 147 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,078 மாணவா்களும், 411 தனித் தோ்வா்களும் இத் தோ்வை எழுதுகின்றனா்.

காரைக்காலில் 27 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 1,024 மாணவா்களும், 183 தனித் தோ்வா்களும் எழுதுகின்றனா். பள்ளிக் கல்வி இணை இயக்குநா் வெ.கோ. சிவகாமி செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்துள்ளாா்.