தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தோ்வு: விசிக கண்டனம்

புதுவையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முறையை அமல்படுத்தக்கூடாது என விசிக வவியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 9:50 pm

Din

புதுவையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முறையை அமல்படுத்தக்கூடாது என விசிக வவியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநில முதன்மைச் செயலா் தேவ. பொழிலன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைவருக்கும் கல்விச் சட்டம் 2009-ன் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பயிலும் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இந்த தோ்வு முறையால் பாதிக்கப்படுவா்.

எனவே, புதுவை அரசு 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.