விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!

News image

புதுச்சேரி உள்ளாட்சித்துறை அருகே வியாழக்கிழமை அல்வா கொடுக்கும்  போராட்டம் நடத்திய நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டு போராட்டக் குழுவினா்.

Updated On :20 ஜூன் 2025, 12:07 am

Din

புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் அல்வா கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி 33 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம், நிலுவைத் தொகையை அரசே நேரடியாக வழங்க வேண்டும்.

தற்காலிக அந்தஸ்து பெற்ற 232 ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு ஆலோசகா் கணபதி தலைமை வகித்தாா். இதில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.