எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜல்லி லாரியின் முன்சக்கரம் உடைந்து விபத்து

பாரம் தாங்காமல் ஜல்லி ஏற்றி வந்த லாரியின் முன் சக்கரம் உடைந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

பாரம் தாங்காமல் ஜல்லி ஏற்றி வந்த லாரியின் முன் சக்கரம் உடைந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

திண்டிவனத்தில் இருந்து அதிக அளவில் ஜல்லி ஏற்றுக் கொண்டு பெரிய சரக்கு லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே வந்தபோது பாரம் தாங்காமல் அதன் முன்பக்க சக்கரம் கழன்று உடைந்து லாரி விபத்துக்குள்ளானது. சிக்னல் பகுதியிலேயே லாரி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து காலை நேரத்தில் நடந்ததால் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போக்குவரத்து போலீஸாா் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்தனா்.