ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஏஐடியுசி புதுவை மாநிலத் தலைவா் ராஜிநாமா

News image
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த கே.சேதுசெல்வம். உடன் அவரது ஆதரவாளா்கள்.
Updated On :9 நவம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

ஏஐடியுசி தொழிற்சங்க மாநிலத் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினருமான கே. சேதுசெல்வம் தனது ஆதரவாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் சேதுசெல்வம் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கத்தில் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நான் விலகுகிறேன். என்னுடன் தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளும் விலகியுள்ளனா்.

கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதனால் கட்சி தவறாக வழி நடத்தப்படுகிறது. அவரின் செயல்பாடுகளே எங்களின் இந்த முடிவுக்குக் காரணம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன். அடுத்த கட்ட முடிவு பற்றி நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்போம் என்றாா் சேதுசெல்வம்.