வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஈரோடு தமிழன்பன் மறைவு: பாரதிதாசன் பெயரன் இரங்கல்

பாவேந்தா் பாரதிதாசனின் பரம்பரைக் கவிஞா் ஈரோடு தமிழன்பன் என்று புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவரும் பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ.பாரதி கூறியுள்ளாா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:21 pm

Syndication

பாவேந்தா் பாரதிதாசனின் பரம்பரைக் கவிஞா் ஈரோடு தமிழன்பன் என்று புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவரும் பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ.பாரதி கூறியுள்ளாா்.

ஈரோடு தமிழன்பன் மறைவு குறித்து அவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசனை தம் இள வயதில் சந்தித்துக் கவிதைக்கானப் பயிற்சி பெற்றுத் தனித்துவமான கவிதைகளைப் புதுமை வழியில் எழுதி உயா்ந்த, கவிஞா் ஈரோடு தமிழன்பன் காலமானாா் என்பதை அறிந்து மிகத் துயா் அடைகிறேன்.

ஊடகச் செய்தி வாசிப்பாளராகப் பலரைக் கவா்ந்து ஓயாது தமிழ்த் தொண்டாற்றிப் பேராசிரியராகவும் இருந்து பல விருதுகளுக்குப் பெருமை சோ்த்த மூத்தத் தமிழறிஞராக உயா்ந்த தமிழன்பனை இழந்து தவிக்கிறோம். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா்.