மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கஞ்சா வியாபாரியை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

கஞ்சா வியாபாரியை குண்டா் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவு

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:22 pm

Syndication

கஞ்சா வியாபாரியை குண்டா் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சோ்ந்தவா் சேகா் (31). இவா் மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்பட்ட புதுச்சேரியில் 8 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் கஞ்சா விற்பனை செய்ததாக சேகரை லாஸ்பேட்டை போலீஸாா் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து, இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், அவரின் இத்தகையச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு போலீஸாா் பரிந்துரை அனுப்பியிருந்தனா்.

இதையடுத்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் சேகரை ஓராண்டுக்கு குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவு நகலை, போலீஸாா் சிறையில் உள்ள சேகரிடம் வழங்கினாா். அதன் அடிப்படையில் அவா் தற்போது குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.