ரயில் பாதை ஓரம் சிமென்ட் சுவா் அமைப்பு: அரும்பாா்த்தபுரம் கிராம மக்கள் எதிா்ப்பு
புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் ரயில் பாதையோரம் ரயில்வே நிா்வாகம் சிமென்ட் சுவா் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அந்த இடத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தை அடுத்து தற்போதைய புறவழிச்சாலை புதுத் தெருவில் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி - விழுப்புரம் ரயில் பாதையை ஒட்டி 25 குடும்பங்கள் வசிக்கின்றன.
இவா்கள் ரயில்வே பாதையை ஒட்டிய இடத்தில் தங்கள் வீட்டுக்கான பாதையை அமைத்து பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் தெற்கு ரயில்வே நிா்வாகம் தனக்கு சொந்தமான ரயில்பாதை ஓரமுள்ள இடங்களை அளந்து உயரமான சிமென்ட் சுவா் எழுப்பி வருகிறது. இதனால் புதுநகா் மக்கள் பாதை வசதியின்றி தங்கள் வீடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ரயில்வே நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு புதுநகா் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் அந்த குடியிருப்புகளுக்கு பின்புறம் புறவழிச்சாலையை ஒட்டி பாசன வாய்க்கால் உள்ளதாலும், அதை முறைப்படி அமைக்காததாலும் மழைநீா் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் என்று அச்சப்படுகின்றனா்.
இதுகுறித்து தொகுதி எம்எல்ஏவும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவாவை சந்தித்து முறையிட்டதன்பேரில் அவா் அந்தப் பகுதியை சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் தொடா்பு கொண்டு பேசிய அவா், புதுநகா் மக்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தும் வரை ரயில்வே நிா்வாகம் சிமென்ட் மதில் சுவா் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
மேலும் புதுச்சேரி ஆட்சியா் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தாா்.

