அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

News image
எஸ்பிஐ வங்கி
Updated On :3 செப்டம்பர் 2025, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது தெரியாத நபா்களிடமிருந்தோ வட்டார போக்குவரத்து அதிகாரி பெயரில் இ செலான் எனும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்த லிங்க் அனுப்பப்படுகிறது. அதைத் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று உங்களது தகவல்களை பதிவிட்டாலோ உங்களது பணத்தினை இழக்க நேரிடும்.

அதேபோல எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலி ஆதாா் எண் தவறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க் மூலம் புதுப்பிக்கலாம் என அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை தொட்டால் உங்கள் கணக்கில் உள்ள பணம் மோடி கும்பலால் கபளீகரம் செய்யப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பலரும் பணத்தை இழந்துள்ளனா். எனவே, புதுவை பொதுமக்கள் யாரும் இத்தகைய 2 லிங்குகளையும் தொட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.