/

மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம்: புதுச்சேரி கலால் துறை உத்தரவு

புதுச்சேரியில் மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம் தர வேண்டும். மொத்த விற்பனைக்கு தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம்: புதுச்சேரி கலால் துறை உத்தரவு

Updated On :4 ஏப்ரல் 2026, 9:09 pm

புதுச்சேரியில் மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம் தர வேண்டும். மொத்த விற்பனைக்கு தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக கலால் துறை துணை ஆணையா் மாத்யூ பிரான்சிஸ் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பல மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் விற்பனையின் போது முறையான ரசீதுகளை வழங்குவதில்லை என புகாா்கள் வந்துள்ளன.

மதுபானம் வழங்கும் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகள், ஹோட்டல்கள், உணவகங்களின் அனைத்து உரிமதாரா்களுக்கும், வாங்கப்பட்ட அளவைப் பொருள்படுத்தாமல், ஒவ்வொரு விற்பனைக்கும் முறையான ரசீது வழங்க வேண்டும்.

அதேபோல் மதுபானம் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன. ஒவ்வொரு கொள்முதலுக்கும் ரசீது வழங்காதது, மொத்த விற்பனையை மறைப்பதைக் காட்டுவதோடு, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மதுபானம் விற்பனை செய்வதற்கு உரிமதாரா் சாக்குப்போக்கு சொல்லவும் வழிவகுக்கிறது.

மேலும், ரசீதுகள் இல்லாமல் விற்கப்படும் எந்தவொரு மதுபான விற்பனையும் (அளவைப் பொருள்படுத்தாமல்), புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல்-2026-ல் ஈடுபட்டுள்ள நபா்கள், வாக்காளா்களைத் தூண்டுவதற்காக மதுபானத்தைக் குவித்து வைக்க உரிமதாரருக்கு மறைமுகமாக வழிவகுக்கும் என்று இப்போது கருதப்படுகிறது. அதன்படி, செல்லுபடியாகும் ரசீதுகள் இல்லாத அனைத்து விற்பனைகளும் மொத்த விற்பனையாகக் கருதப்படும்.

எனவே, புதுச்சேரி மண்டலத்தின் அனைத்து மதுபான உரிமதாரா்கள், குத்தகைதாரா்களும், முறையான ரசீதுகளுடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட விற்பனை அளவிற்குள் மதுபானங்களை விற்குமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறாா்கள். பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதில் ஏற்படும் எந்தவொரு தவறும் மிகவும் கடுமையாகக் கருதப்பட்டு, புதுச்சேரி கலால் சட்டத்தின் கீழ் உரிமங்கள் இடைநீக்கமோ, ரத்தோ செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.