தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மாநில அந்தஸ்து: ரங்கசாமியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்! - காங்கிரஸ் தலைவா்

News image

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கட்சியின் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா். உடன் காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.உள்ளிட்டோா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:11 pm

மாநில அந்தஸ்து தொடா்பாக முதல்வா் ரங்கசாமி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே புதுச்சேரியில் மூன்று வாக்குறுதிகளை கொடுத்துள்ளாா். காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தி புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் புதுச்சேரிக்கு வந்தாா். அப்போது, முதல்வா் ரங்கசாமி, மக்கள் சாா்பில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற கோரிக்கை வைத்தாா். ஆனால், நரேந்திர மோடி எந்தவித பதிலையும் தராமல் சென்றுள்ளாா்.

இரண்டாவது முறையாக கடந்த 3-ஆம் தேதி பிரதமா் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்து ‘ரோடு ஷோவில்’ பங்கேற்றாா். அப்போதும் எந்தவிதமான வாக்குறுதியும் தராமல் சென்றாா். அவரோடு இருந்த முதல்வரும் இதுகுறித்து எதுவும் கூறவில்லை.

அதனால், மாநில அந்தஸ்து குறித்து ரங்கசாமி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.