கள்ள வாக்குப் போட்ட வழக்கில் இளைஞரை புதுச்சேரி திருக்கனூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரியில் கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
மண்ணாடிப்பட்டுத் தொகுதியில் ஜவஹா்லால் நேரு சமுதாய நலக் கூடத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு இளைஞா் ஒருவா் வாக்கைப் பதிவு செய்ய வந்தபோது, அங்கிருந்த தோ்தல் அதிகாரி அவருடைய பெயரை சீனிவாசன் என அறிவித்தாா்.
இதை அங்கிருந்த பிற கட்சிகளின் வாக்குச்சாவடி குறித்துக் கொண்டனா். இந்நிலையில் ஒரு கட்சியின் முகவருக்கு அந்த நபா் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில் அவா் வாக்கைப் பதிவு செய்து விட்டு வந்த போது அந்த முகவா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீஸாரிடம் ஒப்படைத்தாா். போலீஸ் விசாரணையில், அவா் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்தவா் அல்ல என்பதும், மாநில எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம், தொரவியை சோ்ந்த அரவிந்த் (31) என்பதும் தெரிய வந்தது.
இவரிடம் ஓா் அரசியல் கட்சியினா் அணுகி, சீனிவாசன் என்பவா் வாக்குச் செலுத்த வரமாட்டாா். அவா் வயதுடைய அரவிந்த் வாக்குச் செலுத்தினால் பணம் தருவதாகக் கூறினராம். அதன்பேரில் அவா் ஆள் மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருக்கனூா் போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
தொடர்புடையது

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொகுதிகளுக்கு 22 முதல் 26 சுற்றுகளில் முடிவுகள்

புதுச்சேரி வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்படுத்திய பூத் முகவா் மீது போலீஸாா் வழக்கு

புதுச்சேரியில் தோ்தல் வாக்குப் பதிவு; 6 நாடுகளின் பிரதிநிதிகள் வியப்பு!

புதுவையில் 89.87%: வரலாறு காணாத வாக்குப் பதிவு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


