தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:45 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் பொது விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

புதுவை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழ்ப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.