புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குகள் எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டை தாகூா் அரசு கல்லூரி, மோதிலால் நேரு அரசு
பாலிடெக்னிக் கல்லூரி, மகளிா் பொறியியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் துணை ராணுவம் மற்றும் போலீஸாா் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வருவாய்த் துறையினா் மற்றும் வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் மற்றும் தொகுதி தோ்தல் அதிகாரிகள் நாள்தோறும் வந்து ஆய்வு செய்கின்றனா்.
இந்நிலையில், இந்த 3 மையங்களையும் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குகள் எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
வாக்கு எண்ணும் பணிக்கு, அதிகாரிகள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் செல்வதற்கு தனித்தனி வழி ஏற்படுத்தவும், இரும்புத் தடுப்புகள் அமைக்கவும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் 3 மையங்களில் ஷாமியானா பந்தல், குடிநீா் வசதி ஏற்படுத்தவும் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையம்: தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


